fbpx

Events

சிறப்புடன் நடைபெற்றது ஸ்ரீநரசிம்ம அவதாரத் திருவிழா!

மே 18, 2019 – மதுரை மற்றும் திருநெல்வேலி  இஸ்கான் கோயில்களில்  சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீநரசிம்ம அவதாரத் திருவிழா நடைபெற்றது. ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி, ஸ்ரீஸ்ரீகிருஷ்ணபலராமர்  ஸ்ரீஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் ‘ஸ்ரீநரசிம்ம சதுர்தசி சிறப்பு அலங்காரத்தில்’ அருள்பாலித்தனர். தொடர்ந்து ஸ்ரீஸ்ரீலெக்ஷ்மி நரசிம்மருக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி ஒன்பது கலசங்களில் இருந்து விசேஷ தீர்த்தங்கள் நிரப்பப்பட்டு பூஜிக்கப்பட்டன.  மாலை 6 மணியளவில் பால், பழம் உள்ளிட்ட பஞ்சகவ்யம், பஞ்சாமிர்த்ம், பன்னீர், இளநீர் மற்றும் பழரசங்கள் போன்ற பல வகையான அபிஷேகங்கள் […]

மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலம் இஸ்கான் புத்தகங்களுக்கு வரவேற்பு!

ஏப்ரல்  14-19, 2019 –  தமிழகத்தின் மதுரையில் வரலாற்று புகழ்மிக்க சித்திரைத் திருவிழா நடைபெற்றது. இதன் முக்கிய சிறப்பம்சமாக ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரும், ஸ்ரீகள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழாவும் நடந்தது.  விழாவை முன்னிட்டு  ஸ்ரீலபிரபுபாதா எழுதிய பகவத்கீதை மற்றும் ஆன்மீக புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. மேலும் அழகர் கோவில் மஹாத்மியம் குறித்த ‘கிருஷ்ண அமுதம்’ சிறப்பிதழ் ஏராளமான மக்களின் மனதை கவர்ந்தது.  இந்த புத்தக விநியோகத்தில் மதுரை, திருநெல்வேலி, தேனி மாவட்ட பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

உயர்ந்த சுவையே தாழ்ந்த சுவையை விரட்டும்!

மார்ச் 13, 2019 – மதுரை தனபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரியில் மந்திரா மெடிட்டேஷன் குறித்த அறிமுக வகுப்பை இஸ்கான் நடத்தியது.  தவறான பழக்க வழக்கங்களில் இருந்து விடுபடுவது எவ்வாறு?” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த சிறப்பு வகுப்பில் சுமார் 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இஸ்கான் தென் தமிழக மண்டலச் செயலாளர் திரு.சங்கதாரி பிரபு அவர்கள்   சிறப்புரை ஆற்றினார். இதில் அவர்,  தவறான பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட ஒரே வழி நல்ல பழக்க வழக்கங்களில் ஈடுபடுவதேயாகும். […]

ஒழுக்கம் தவறாமல் இருக்க ஆன்மீக பயிற்சி அவசியம்!- நிறைவு விழாவில் காவல்துறை டிஐஜி அறிவுரை!

மார்ச் 5, 2019 – ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘நன்னடத்தை மற்றும் நற்குணங்களை வளர்த்தல்”  என்ற தொடர் வகுப்பை   ஜனவரி முதல் மார்ச் 2019 வரை  பல பகுதிகளாக இஸ்கான் நடத்தியது.   முதலாமாண்டு மாணவர்களுக்காக நடைபெற்ற இந்த பயிற்சிக்கான வகுப்புகள்,  மதுரை மற்றும் திருநெல்வேலி இஸ்கான் மையங்களின் மூத்த யோகாசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ்  நடைபெற்றன. அண்மையில் இதன் நிறைவு விழா மார்ச் 5, 2019 அன்று நடைபெற்றது.  மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் துறை […]

நீதித்துறையிலும் தியானம் மிகவும் அவசியம்!

பிப்ரவரி 14, 2019 –   சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரை கிளையில், உயர் நீதி மன்றத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு மன அழுத்த நிர்வாகம் மற்றும் தியானம் (குணாணூஞுண்ண் –ச்ணச்ஞ்ஞுட்ச்ணணா ச்ணஞீ –ஞுஞீடிணாச்ணாடிணிண) என்ற சிறப்பு நிகழ்ச்சியை மதுரை இஸ்கான் நடத்தியது. மதிப்பிற்குரிய நீதிபதி திரு.பிரகாஷ் அவர்கள் தலைமை தாங்கினார்.  அவர் தனது தலைமை உரையில், உலகம் முழுவதும், நீதித்துறை உட்பட அனைத்திலும் தியானம் முக்கிய பங்கு வகிக்கிறது” என்று குறிப்பிட்டார். இஸ்கானின் தென் தமிழகச் […]

கீதை காட்டும் மனஒருமை, மாணவர்களுக்கு முக்கியத் தேவை!

ஜனவரி 23, 2019 – தேனியிலுள்ள ‘சாந்திநிகேதன் மேல்நிலைப்பள்ளியில்’ 9 முதல் 12 வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியருக்கான பகவத்கீதை விழிப்புணர்வு நிகழ்ச்சியை மதுரை இஸ்கான் நடத்தியது.  இதில் திரு.கிருபேஸ்வர கௌராங்க தாஸ் அவர்கள், மனதை ஒருமுகப்படுத்தி கல்வியில் கவனம் செலுத்துவதற்கு பகவத்கீதை காட்டும் வழிமுறைகள் குறித்து பகவத்கீதையிலிருந்து மேற்கோள்கள் அளித்து பேசினார். இதில் பங்கேற்ற  400 மாணவர்கள் அனைவரும் இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியர்  ஸ்ரீலபிரபுபாதா உரை எழுதிய பகவத்கீதை உண்மையுருவில்” புத்தகங்களை வாங்கி பயனடைந்தனர்.  […]