fbpx

News

இஸ்கான் இந்தியா இளைஞர் சத்சங்கம்

நவம்பர் 12-15, 2019, இஸ்கான் இந்தியா இளைஞர் சத்சங்கம்( ISKCON India Youth Convention) ராஜஸ்தானில் உள்ள புனித ஸ்தலமான ‘நாத் துவாரா’ நகரத்தில் நடைபெற்றது. இந்த சத்சங்கத்தை ‘நாத் துவாரா’ ஸ்ரீநாத்ஜி கோயிலின் மூத்த நிர்வாகிகள் துவக்கி வைத்தனர். இஸ்கான் மூத்த சந்நியாசிகளான தவத்திரு.கோபால கிருஷ்ண கோஸ்வாமி மஹாராஜ் அவர்களும், தவத்திரு.ஜெயபதாக ஸ்வாமி மஹாராஜ் அவர்களும் இதன் முக்கியத்துவம் குறித்து (ஆன்லைனில்) ஆசியுரை வழங்கினர். நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த சத்சங்கத்தில் இஸ்கானின் பல மையங்களில் […]

இன்றைய இளைஞர்களுக்கு இந்த வகுப்புகள் அவசியம்!

IYF Prg at RVS College 1.11.2019

நவம்பர் 1, 2019 – திண்டுக்கல் ஆர்விஎஸ் பொறியியற் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான யோகா பற்றிய அறிமுக உரையை மதுரை இஸ்கான் நடத்தியது. மன அழுத்தத்தை கையாள்வது எப்படி? ” (How to Manage Streess?) என்ற தலைப்பில், தென்தமிழக இஸ்கான் மண்டலச் செயலாளர் திரு.சங்கதாரி பிரபு அவர்கள் சிறப்புரை அளித்தார். இதில் அவர் மன அழுத்தம் என்பது எல்லா தரப்பினரும் சந்திக்கும் ஒன்றாகும். அதிலும் மாணவர்கள் இவ்விஷயத்தில் கவனமாக கையாண்டால் கல்வியில் கவனம் செலுத்துவது […]

நல்ல பண்பும், சீரிய சிந்தனையும் தரும் பயிற்சி!

செப்டம்பர் 30, 2019 – திருநெல்வேலி ம.தி.தா இந்து கல்லூரி மாணவர்களுக்கு நன்னடத்தை மற்றும் நற்குணங்களை வளர்த்தல்” (Personality & Character Development Course) என்ற பயிற்சி வகுப்பை இஸ்கான் நடத்தியது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு தென்தமிழக இஸ்கான் மண்டலச் செயலாளர் திரு.சங்கதாரி பிரபு அவர்கள் சான்றிதழ் வழங்கி சிறப்புரை அளித்தார். இதில் அவர் மாணவப் பருவம் மிகவும் முக்கியமானது. இந்த பருவத்தில் நீங்கள் நற்பண்புகளுடனும், சீரிய சிந்தனைகளுடனும் வளர்ந்தால் எதிர்காலம் நன்றாக இருக்கும். இதற்கான அஸ்திவாரமே […]

சிறப்புடன் நடைபெற்றது “ஸ்ரீ ராதாஸ்டமி”!

செப்டம்பர் 6, 2019 – மதுரை மணிநகரம் இஸ்கான் ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி திருக்கோயிலில் ஸ்ரீராதாஷ்டமி விழா சிறப்புடன் நடைபெற்றது. விழாவின் சிறப்பாக, ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி விசேஷ அலங்காரத்தில் அருள்பாலித்தனர். தொடர்ந்து பஞ்சகவ்ய, பஞ்சாமிர்த அபிசேகங்கள் நடைபெற்றன. இஸ்கான் மதுரை மற்று திருநெல்வேலி கிளையின் தலைவர் அருட்திரு.சங்கதாரி தாஸ் அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். இதில் அவர், “ஸ்ரீமதி ராதாராணி தூயபக்தையும், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நித்யமான அன்பிற்குரியவரும் ஆவார். ஸ்ரீமதி ராதாராணி அதிர்ஷ்ட தேவதைகளுக்கெல்லாம் தலைமையானவர். […]

பிரதமர் வாழ்த்துரை…

ஆகஸ்ட் 16, 2019 – ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் மாண்புமிகு. நரேந்திர மோடி அவர்கள் வாழ்த்துச் செய்தி வழங்கியிருந்தார். இதில் அவர் குறிப்பிட்டதாவது; மங்களகரமான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா, ஸ்ரீகிருஷ்ணரின் எண்ணிலடங்கா பக்தர்களுக்கு மகிழ்ச்சியான தருணமாகும். ஸ்ரீகிருஷ்ணரின் செய்தி, ஞானம், தெய்வீக தத்துவத்தைப் பரப்புவதில் இஸ்கான் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இஸ்கானின் அங்கத்தினர்கள் இறைத்தொண்டு மற்றும் மனிதநலத் தொண்டு ஆகிய இரண்டும் ஒருங்கிணைந்த வகையில், பல மனித நேய நலத் தொண்டுகள் மூலமாக […]

நீலநிறபட்டுத்தி பலராமர் அருள்பாலித்தார்!

– திருநெல்வேலியில் பலராம் பூர்ணிமா நடைபெற்றது…ஆகஸ்ட் 15, 2019 – பகவான் ஸ்ரீபலராமரின் அவதார திருநாளான பலராம் பூர்ணிமா திருநெல்வேலி இஸ்கான் ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பலராமர் திருக்கோயிலில் சிறப்புடன் நடைபெற்றது. விழாவின் சிறப்பாக பலராமர் நீலநிற பட்டு உடுத்தியும், கிருஷ்ணர் மஞ்சள் நிற பட்டு உடுத்தியும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். தொடர்ந்து மஹா அபிஷேகம் நடைபெற்றது.  மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, சின்னமனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். விழாவில் பலராமரின் சிறப்பு குறித்து, […]

ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி ஊஞ்சல் உற்சவம்!

ஆகஸ்ட் 11, 2019 – ஸ்ரீகிருஷ்ண ஜெயந்திக்கு முன்பாக வரும் ஏகாதசி முதல் பௌர்ணமி வரை கொண்டாடப்படும் ஊஞ்சல் உற்சவமே  ‘ஜுலன் யாத்ரா’ ஆகும். இவ்வருடம் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை கொண்டாடப்பட்டது. ‘ஜூலன்’ என்றால் ஊஞ்சல். ‘யாத்ரா’ என்றால் விழா. ஜூலன் யாத்ரா,  கிருஷ்ணருக்கு பிரியமானதும், ஸ்ரீமதி ராதாராணியை மகிழ்ச்சிப்படுத்தக் கூடியதும் ஆகும். வருடந்தோறும் ஜூலன் யாத்ரா விழா  நாட்களில் இஸ்கான் கோயிலில் தினசரி மாலை 6 மணிக்கு துவங்கும் பூஜைகளை […]

Thank You

Hare Krishna.Thank you very muchfor your Kind Donation. ஹரே கிருஷ்ணா.தங்களுடைய நன்கொடைக்கு மிக்க நன்றி.தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் திருவருள் பொழிவாராக. நன்றி. ஹரே கிருஷ்ணா. – ISKCON TempleMadurai – Tirunelveli – PeriyakulamPh/Whatsapp: 70106 41131