fbpx

நல்ல பண்பும், சீரிய சிந்தனையும் தரும் பயிற்சி!

செப்டம்பர் 30, 2019 – திருநெல்வேலி ம.தி.தா இந்து கல்லூரி மாணவர்களுக்கு நன்னடத்தை மற்றும் நற்குணங்களை வளர்த்தல்” (Personality & Character Development Course) என்ற பயிற்சி வகுப்பை இஸ்கான் நடத்தியது.

இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு தென்தமிழக இஸ்கான் மண்டலச் செயலாளர் திரு.சங்கதாரி பிரபு அவர்கள் சான்றிதழ் வழங்கி சிறப்புரை அளித்தார்.

இதில் அவர் மாணவப் பருவம் மிகவும் முக்கியமானது. இந்த பருவத்தில் நீங்கள் நற்பண்புகளுடனும், சீரிய சிந்தனைகளுடனும் வளர்ந்தால் எதிர்காலம் நன்றாக இருக்கும். இதற்கான அஸ்திவாரமே இந்த ஜபயோகா பயிற்சி ஆகும். இங்கு கற்றுக் கொண்டதை நீங்கள் தினசரி கடைபிடித்து பயன்பெற வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் திரு.சுப்ரமணியன் அவர்கள் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தின் கீழ் பேராசிரியர்கள் திரு.பாலசுப்ரமணியன் மற்றும் திரு.சங்கர் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *